Tuesday, July 10, 2007

உயிராய் என்னை



பல்லவி

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
கருவில் என்னை சுமந்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்

பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய்
பூவாய்த் தானனே எனை வளர்த்தாய்
அம்மா...அம்மா...அம்மா...அம்மா...

இடையிசை ராப் பாடல் குரல்:
சையின் சுதாஸ் (நோர்வே)

சரணம் 1

கடவுளை கண்முன் பார்த்தது இல்லை
உன் வடிவில் நான் பார்த்தேன்
உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை
உன் விழியில் நான் பார்த்தேன்

உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ
சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ
ஆயிரம் உறவின் வாசல் நீ
அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன்

நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான்
உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான்

உயிராய் என்னை வளர்த்தவள் நீ
நீ தந்த உயிரில் பாடுகின்றேன்
கருவில் என்னை சுமந்தவள் நீ - உன்
கனவுகள் சுமந்தே வாழுகின்றேன்.

பாடல்: வசீகரன்
குரல்: சாம்.பி.கீர்த்தன், சையின் சுதாஸ்
இசை: வி.எஸ்.உதயா
எண்: 02
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல்மொழி

No comments: