Monday, July 30, 2007

ஏஐன்சிக்காரன்



பல்லவி

ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என்
கதிர்காம முருகன் காப்பாத்திட்டான்
அப்பாவின் காசு காற்றோடு போச்சு
அம்மாவின் தாலி அடகுக்கு போச்சு

வெளிநாடு போக ஆசைப்பட்டேன்
அதனால தானே அவதிப்பட்டேன்(2)

சரணம் 1

வேர்வை சிந்தி வேலை செய்து சீட்டுக்கட்டி
சேர்த்து வைத்த காசு - எங்களோட காசு...
லண்டன் யேர்மன் சுவிஸ் பிரான்சில் பனிக்குளிரில்
வேலை செய்த காசு - அண்ணனோட காசு

சுத்திப் போட்டான் ஐயோ சுத்திப் போட்டான்
நடுத் தெருவில நிக்கறேனே முருகா
அதிகாரமா ஒய்யாரமா..
வெளிநாட்டு கார்ல போறான் முருகா

கனடாவில் குடியேற ஆசைப்பட்டேன்
கதிர்காமம் வந்துப்புட்டேன்
ஒடபெல்லாம் நகைபோட ஆசைப்பட்டேன்
ஒட்டாண்டி ஆகிப்புட்டேன்

சரணம் 2

கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு கம்பீரமா
உலா வர்ரான் பாரு - கொடுமைய பாரு
கந்தல் துணி கட்டி நிற்கும் என் நிலைய
கேக்கிறது யாரு கந்தா கூறு

புத்தி கெட்டு சக்தி கெட்டு
நித்தமும் நான் வாடுறேனே குமரா...
உன் பார்வை பட்டு தட்டு கெட்ட
என் பித்தம் என்று தெளியுமோ குமரா...

பழனி ஏறி மொட்டை போட
ஆசைப்பட்டேன் ஏறாம போட்டுக்கிட்டேன்
தங்கவேல் உனக்கு வைக்க நேந்துகிட்டேன்
நொந்து நூலகிப்புட்டேன்.

பாடல்: வசீகரன்
குரல்: வி.எஸ்.உதயா
இசை: வி.எஸ்.உதயா
எண்: 05
ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

1 comment:

Anonymous said...

வணக்கம் கவிஞர் வசீகரன்,

நல்ல பாடல். பாடலை கேட்ட போது கடந்தவை, நடந்தவை பல நினைவுக்கு வந்தது. பாடலுக்கு நன்றி.