Monday, August 06, 2007

கண்ணீரில் குளிக்கின்ற



பல்லவி

கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல்
தண்ணீரில் மிதந்தது சோகம்
அலை கொண்டு வந்த கடல்-மனித
தலை கொண்டு போனதே
இனம் மதம் மொழி கடந்து-எங்கள்
தேசம் சுமந்திடும் சோகமடா!

குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம்

சரணம் 1

போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை
சுனாமி அலைகள் கிழித்ததே
வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை
வாழ்வளித்த கடலே அழித்ததே
ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே
கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2)
விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம்
பிணவாடைக் கடலே கேட்கிறதா...?
ஓலம் கேட்கிறதா...?

சரணம் 2

அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே
சீறிவந்த பேரலையே கொண்டு சென்றாய்
வீடுகள் போனதே கால்நடைகள் போனதே
தேசமே சோகமாய் ஆனதே
ரணங்களால் பிழிந்த எங்கள் இதயத்தையே
பிணங்களாய் குவித்து வைத்த கடலலையே
விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம்
பிணவாடைக் கடலே கேட்கிறதா...?
ஓலம் கேட்கிறதா...?

நிறைவுப் பல்லவி

கண்ணீரும் கவலையும் வேண்டாம்
தண்ணீரில் இனிப்பயம் வேண்டாம்
தென்றலும் புயலுமே நிறைந்ததே வாழ்க்கையே
இயற்கையின் எல்லையை புரிந்திடு மனிதனே!
இனம் மதம் மொழி கடந்து- எங்கள்
தேசம் சுமந்திடும் துயர் துடைப்போம்

பாடல்: வசீகரன்
குரல்: கிருஷ்ணராஐ; சாம்.பி.கீர்த்தன், காஞ்சனா, பிரியங்கா
இசை: வி.எஸ்.உதயா
எண்: 06
ஏட்டில்:10.01.2005

இசைத்தொகுப்பு: காதல் மொழி

No comments: