Monday, August 20, 2007
பிறந்த நாளை
பல்லவி
பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே
இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே
அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை
ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய்
நல்ல நல்ல பாட்டைக் கேட்டு
தன்னாலே ஆட்டம் போடுங்க
நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு
உலகை நீங்கள் வெல்லுங்க
சரணம்-1
தரணியெங்கும் சென்று நீயும்
தமிழைப் பரப்பிட வேண்டும்
நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும்
தமிழில் கதைத்திட வேண்டும்
உன்தன் மூச்சுக் காற்றில்கூட
புலமை தெரிந்திட வேண்டும்
அன்பின் கதவை திறந்து வைத்து
நட்புகள் வளர்த்திட வேண்டும்
அன்னை தந்தை சொல்லும் வார்த்தை
வாழ்வில் காட்டிட வேண்டும்
நல்ல நல்ல பிள்ளையாய்
நாடு போற்றும் வீரணாய்
அன்னை தந்தை பெயரைக்
காக்க வேண்டும்
சரணம்-2
சின்னச் சின்ன குறும்புகள் செய்து
வாழ்வினை ருசித்திட வேண்டும்
சொந்தம் பந்தம் எல்லோரும் உன்னை
அள்ளி அணைத்திட வேண்டும்
இமயம் கூட உயரம் இல்லை
உன் நெஞ்சில் துணிவிருந்தால்
வானம் கூட வசப்படுமே
உன் வாழ்வில் பணிவிருந்தால்
இதயம் திறந்து தமிழன் புகழை
நீயும் இசைத்திட வேண்டும்
நல்ல நல்ல பிள்ளையாய்
நாடு போற்றும் வீரணாய்
அச்சமின்றி உலகை
ஆள வேண்டும்.
பாடல்: வசீகரன்
இசை: வி.எஸ்.உதயா
குரல்: சாம்.பி.கீர்த்தன்
எண்: 07
ஏட்டில்:
இசைத்தொகுப்பு: காதல் மொழி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment