Tuesday, July 28, 2009

தமிழர் அலையென எழுந்தனர் பார்

பல்லவி

தமிழர் அலையென எழுந்தனர் பார்
தேம்ஸ் நதிக்கரை அதிருது பார்
உலகம் முழுவதும் தமிழர் இணைந்தனர்
உணர்வின் எழுச்சி இதுதான்
கனடா நோர்வே பாரிஸ் லண்டன்
தமிழகம் பொங்கி எழுந்தது பார்
உலகே உலகே போரை நிறுத்து-தமிழன்
வேரை அறுக்கும் போரை நிறுத்து

சரணம்-1
விழித்திடு விழித்திடு உலகத் தமிழா
நாங்கள் வீழ்வது சரியா?
இலங்கை என்ற காடு பிளந்து
தமிழீழம் காண்பது பிழையா?

நாற்பத்தியெட்டில் வாங்கிய சுதந்திரம்
ஈழத் தமிழன் பெற்ற தரித்திரம்
கற்கண்டு பூமி நெருப்பில் குளிக்க
உலகம் ஊமையாய் இருப்பது விசித்திரம்

எழுவோம் ....எழுவோம் - இனிவரும்
தடைகள் உடைப்போம்
உலகத் தமிழினம் இணைந்தது என்று
எதிரி படைக்குச் சொல்வோம்

சரணம்-2
இனிமேல் இனிமேல் ஓய்வுகளில்லை
அலைகடல் என்று திரள்வோம்
வன்னிப் போரில் வாடும் தமிழனை
எங்கள் தோள்களில் சுமப்போம்

மடிந்து மடிந்து மண்ணாய்ப் போகினும்
தமிழ் ஈழ விடியலை மறப்போமா?
கொத்தணிக் குண்டுகள் மண்டையைப் பிளப்பினும்
எங்கள் உயிர் மானத்தை இழப்போமா?

எழுவோம்....எழுவோம் - இனிவரும்
தடைகள் உடைப்போம்
முத்துக்குமார் ஏற்றிய நெருப்பினிலே
அக்கினிக் குஞ்சாய் பிறப்போம்

வசீகரன்
நோர்வே
08.02.09

No comments: