Sunday, June 24, 2007
யாழ்தேவியில் காதல்
பல்லவி
யாழ்தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ்மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு - ஓர்
உறவுப் பாலம் நீ - சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்
சரணம் 1
கோட்டையிலே கூச் சத்தம்
போகுமிடமெல்லாம் புதுச்சந்தம்
யாழ்நகர் சென்று சேரும் வரை
ஊர்களை இணைக்கும் பாலம் நீ
றாகமத்தைத் தாண்ட சேற்றெருமை துள்ளும்
அலரிமலர்த் தோட்டம் அழகழகாய் ஆடும்
பள்ளித் தாமரைகள் ஆனந்த நடை பயிலும்
போதிமரப் புத்தன் கோயில்களைத் தாண்டும்
பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
ஐன்னல் ஓரம் ஓடும் வயல்கள் சந்தோசம்(2) - அதில்
பச்சைப் பயிர்கள் ஆடும் நடனம் சந்தோசம்(2)
சரணம் 2
வன்னியைத் தொட்ட ரயிலே நீ
செம்மண் வாசனை நுகர்ந்தாயா
தென்னை தொட்ட தென்றலென- நம்
உள்ளம் குதிப்பதை உணாந்தாயா
வேலிகளில் எல்லாம் தலையசைக்கும் கிளுவை
வேப்ப மரக்காற்றும் புதுக்கவிதையாக இனிக்கும்
நாள் முழுக்க உழைக்கும் கமக்காரர் வேகம்
யாழ்தேவி உனக்குப் போட்டியாக வருமோ?
பெட்டி விட்டு பெட்டி தாவலாம் நண்பனே
சின்னச் சின்னக் காதல் பார்க்கலாம் நண்பியே
பனையில் ஆடும் காவோலை சங்கீதம் சங்கீதம்
யாழ்ப்பாணம் வந்ததைச் சொல்லும் பனைவாசம் சந்தோசம்
பாடல் : வசீகரன்
குரல் : சாம்.பி.கீர்த்தன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 08
ஏட்டில் : 29.04.2003
காதல் கடிதம்
Monday, June 18, 2007
ஓரு நதியின் பெயரோடு
பல்லவி
ஓரு நதியின் பெயரோடு பிறந்தவளே
பெரு நதியாய் என்மேல் பாய்ந்தவளே
உன் உயிராலே என்னைத் திறந்தவளே
என் உயிரோடு வந்து கலந்தவளே.
என் விழியோரம் தினம்தினம் மிதக்கின்றாய்
ஏதேதோ புதுப்புது ரகசியம் கதைக்கின்றாய்
காதலா...காதலா... காதலா...
காதலா...காதலா...காதலா...
சரணம் - 1
கனவில் கிளித்தட்டு ஆடிடும் வேளை
புதுமெட்டு போடுகிறாய்
மழையெனும் இசைதனில் மூழ்கிடும் வேளை
தீயினை மூட்டுகிறாய்
தாலாட்டும் மடிமீது இடம் கேட்கிறேன்- நீ
பாராட்டும் மொழிமீது குளிர் காய்கிறேன்
தினம் தோறும் கவி பூக்கும்
இசைவந்து தேன் வார்க்கும்!
நீயின்றி என் வாழ்வு இல்லையே!
சரணம்- 2
தாமரைக் குளத்தில் சூரியக் கதிராய்
தினம் தினம் குதிக்கின்றாய்
ஆலமரத்தில் பேசிடும் கிளியாய்
செவிகளில் நிறைகின்றாய்
உன் பார்வை வரம் கேட்கும்
ஏழை யாசகன்
உன் பேரை தினம் பாடும்
நானோர் வாசகன்
நறுமுகையே குறுநிலவே
தரு நிழலே குளிர் மழையே
நீயின்றி என் வாழ்வு இல்லையே.
பாடல் : வசீகரன்
குரல் : விதுபிரதாபன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 07
ஏட்டில் : 07.11.2001
காதல் கடிதம்
எழுது என் அன்பே
பல்லவி
எழுது எழுது என் அன்பே-ஒரு
கடிதம் எழுது என் அன்பே
உன்னை நான் நேசிக்கிறேன்
அதனால் தானே சுவாசிக்கிறேன்
சரணம் 1
பனியில் உறையும் உன் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் எனைப் பார்த்து
பாசம் நேசம் தருவேனே- உன்
பாதை எங்கும் வருவேனே
பார்த்த விழி பூத்திருப்பாய்-உன்
பார்வையாக வருவேனே
அலையாக நான் வந்து அணைப்பேனே-அந்தி
மழையாக உன்னை வந்து நனைப்பேனே
சரணம் 2
மனசில் பூக்கும் உன் பூக்கள்- என்
சேலை சேர்ந்துவிடும் வேளைவரும்
பூவின் வாசம் தருவவேனே - உன்
மேனி எங்கும் சிலிர்ப்பேனே - அங்கு
உனக்காக நான் வந்து கவிபாட- இங்கு
இருளோடு நீவந்து முகம்காட்டு-
உயிரோடும் உடலோடும் நான்தானே- என்
உறவாலே உனைவந்து தாலாட்டுவேன்
காதல் வாழ்க காதல் வாழ்க
பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை
காதல் வாழ்க காதல் வாழ்க
பாடல் : வசீகரன்
குரல் : அம்பிலி
இசை : வி.எஸ்.உதயா
எண் : 06
ஏட்டில் :
காதல் கடிதம்
பனங்காய்ப் பணியாரமே
தொகையரா
வல்லைவெளி காற்றடிக்கும்
திரளி மீன் துள்ளியெழும்
ஒடியல் கூழ் குடித்தால்
மனமெங்கும் விண்கூவும்
பல்லவி
பனங்காய்ப் பணியாரமே பனங்காய்ப் பணியாரமே
பச்சைக் கொழுந்து வெத்திலையே
உன் பார்வை கொஞ்சம் பத்தலையே
பனையோலைப் பாய் விரிச்சு
படுத்துறங்கும் மணியக்கா மணியக்கா
கமுகமரப் பாக்குத் தந்து கவுக்கிறது என்னக்கா
சரணம் 1
காங்கேசன்துறை சுண்ணாம்பை கொஞ்சம்
தடவித் தடவிகொடடி
உன் கையால என் வாய் சிவக்க
வெற்றிலை மடிச்சுக் கொடடி
கொக்கார மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் என் வீட்டுக் கூரையில் ஏறுது.
கீரிமலை பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாகச் சேர்த்தடிச்சா கிக்குத்தான் கிக்குத்தான்
நான் கோவிற்கடவை ஆளு! நீ
சேலை கட்டிய தேரு !
சரணம் 2
மட்டு நகர் தயிர் எடுத்து
வளைஞ்சி நெளிஞ்சி வாடி
என் உயிரை பிடித்து உறைய வைத்து
உறியில் வைத்துப் போடி
மண்பானைத் தயிர் கனக்கம் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?
கண்டிக் குளிருலதான்
கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேத்த
நெஞ்சு நினைக்குதடி
முல்லைத்தீவு போவோம்
முயலு இரண்டு பிடிப்போம்
நீ மூச்சிழுக்கும் நேரம்
நான் பேச்சிழந்து போவேன்
பாடல் : வசீகரன்
குரல் : கிருஷ்ணராஐ; குழுவினர்
இசை : வி.எஸ்.உதயா
எண் :
ஏட்டில் :
காதல் கடிதம்
உயிருக்குள் ஊர்சுற்றும்
பல்லவி
உயிருக்குள் ஊர்சுற்றும்
உறவுப் பூமழையே- என்
உடலுக்குள் உயிர்ஊட்டும்
இன்பத் தேன்மழையே
மண்ணுக்குள் வீசும்
தென்றல்க் காற்றாய்- என்
மனசுக்குள் வந்தாய்
இசைமழையே
சரணம் 1
தூலிப்பான் பூவினிலே பூத்தவளா?
நீ யாரும் படிக்காத புத்தகமா?
மழைத்துளியாய் வந்து நீ வீழ்கையிலே
வெள்ளிக் கொலுசின் ஓசை கேட்குதடி
தேசம் விட்டு தேசம் வந்த நாயகியே
ஏனை தீண்டும் இன்பத் தேன்மொழியே
தினம் பாக்கள் சொல்லிப் பாடப்போகிறேன்
என் வாழ்க்கை உன்னை வாழப்போகிறேன்.
சரணம் 2
வானத்தில் வந்துதித்த தேவதையா?
நீருக்குள் மூழ்காத தாமரையா?
மழைவெப்பம் தந்து நீ போகையிலே
என் மனசுக்குள் வசந்தம் தோன்றுதடி
தேகம் மீது மோதும் தாவணியே
எனைத் தொட்டு எழுதும் மைத்துளியே
தினம் பாக்கள் சொல்லிப் பாடப்போகிறேன்
என் வாழ்க்கை உன்னை வாழப்போகிறேன்.
பாடல் : வசீகரன்
குரல் : உன்னிக்கிருஷ்ணன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 04
ஏட்டில் :
காதல் கடிதம்
ஈழப் பெண்ணே
பல்லவி
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
சின்னக் கவிபாடடி
உன் கண்ணுக்குள்ளே ஏன் ஓவியத்தை
வரைந்தவர் யார் சொல்லடி
உன் நினைவுகள் என்னை உருக்கும்
பல பட்டாம் பூச்சிகள் பறக்கும்
ஆயிரம் வண்ணங்கள் சிரிக்கும்
என் வாசலில் வானவில் உதிக்கும்
தினம் தினம் மின்மினி
பறக்கின்றதே
சரணம் 1
நிலவின் மடியில் உலகம் மயங்கும்
அவசரமாய் காலை விடியும்
மஞ்சள் பூக்கள் ரோஐh கூட்டம்
அழகழகாய் நம்மை வாழ்த்தும்
மின்னல் மேகம் வந்து சால்வை போர்த்தும் போது
மழைத்துளி எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயில் வந்து மண்ணைப் போர்த்தும் போது
மனசெங்கும் பரவசமே...
கொள்ளை கொள்ளை இன்பம்
எல்லை இல்லா வானம்
விண்ணுக்கொரு பாலம் செய்வோம்
பூப்பறிப்போம்
சரணம் 2
மூன்றே மாதம் மூன்றே மாதம்
கோடைகாலம் பூத்து விரியும்
மஞ்சள் பூக்கள் மஞ்சள் பூக்கள்
இளம் கூந்தல் தேடித் திரியும்
பருவப் பூக்கள் சேலை கட்டும் போது
பனித்துளி எட்டிப் பார்க்கும்
ஆக்கப் பிறிக் கடற்க்கரையில்
அலைகள் மோதும் மோதும்
சிலைகள் கால் நனைக்கும்
சிறைகள் தாண்டிப் போவோம்
சிறகுகள் இரண்டு கேட்போம்
நீயும் நானும் காதல் செய்து
வேர்த்திருப்போம்.
பாடல் : வசீகரன்
குரல் : மதுபாலகிருஷ்ணன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 03
ஏட்டில் :
காதல் கடிதம்
யாரும் எழுதாத பாடல்
பல்லவி
ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை
உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்
இணைய வேண்டும்
இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்
இருக்க வேண்டும்
பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை
என் வாழ்வு மலரும் போதே
அதைக் கேட்கத்தானே ஆசை
சரணம் 1
ஆண்: கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று
என் கவிதைகளும் உளவு பார்த்ததோ
நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று
என் கனவுகளும் கேட்டு நின்றதோ
பெண்: கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய்
என் இதயத்தின் புதுத் திருடா
கவலைகள் ஏனடா
காதல் யுத்தம் செய்யப்போகிறேன்
காத்திருந்து வாழப் போகிறேன்
ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை
சரணம் 2
பெண்: என் ஐன்னல் ஓரம் ஒரு பார்வை பார்க்கிறாய்
என் மூச்சைக்கூட இரவல் கேட்கிறாய்
என் பேச்சைக்கூட பதிவு செய்கிறாய்
என் கால்த் தடத்தை களவு செய்கிறாய்
ஆண்: புதியதோர் உலகம் வேண்டும்
அங்கு எனை வெல்ல நீ வேண்டும்
காதலே வந்ததே
புதிய வாழ்வின் அர்;த்தம் சொன்னதே
மீண்டும் மீண்டும் பிறக்கச் சொன்னதே
பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை
என் வாழ்வு மலரும் போதே
அதைக் கேட்கத்தானே ஆசை
எனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்
இணைய வேண்டும்
இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்
இருக்க வேண்டும்
ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை
பாடல் : வசீகரன்
குரல் : உன்னிமேனன், ஐPவரேகா
இசை : வி.எஸ்.உதயா
எண் : 02
காதல் கடிதம்
Subscribe to:
Comments (Atom)