Monday, June 18, 2007

யாரும் எழுதாத பாடல்



பல்லவி

ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை
உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்
இணைய வேண்டும்
இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்
இருக்க வேண்டும்

பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை
என் வாழ்வு மலரும் போதே
அதைக் கேட்கத்தானே ஆசை

சரணம் 1

ஆண்: கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று
என் கவிதைகளும் உளவு பார்த்ததோ
நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று
என் கனவுகளும் கேட்டு நின்றதோ

பெண்: கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய்
என் இதயத்தின் புதுத் திருடா
கவலைகள் ஏனடா
காதல் யுத்தம் செய்யப்போகிறேன்
காத்திருந்து வாழப் போகிறேன்

ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை

சரணம் 2

பெண்: என் ஐன்னல் ஓரம் ஒரு பார்வை பார்க்கிறாய்
என் மூச்சைக்கூட இரவல் கேட்கிறாய்
என் பேச்சைக்கூட பதிவு செய்கிறாய்
என் கால்த் தடத்தை களவு செய்கிறாய்

ஆண்: புதியதோர் உலகம் வேண்டும்
அங்கு எனை வெல்ல நீ வேண்டும்
காதலே வந்ததே
புதிய வாழ்வின் அர்;த்தம் சொன்னதே
மீண்டும் மீண்டும் பிறக்கச் சொன்னதே

பெண்: யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை
என் வாழ்வு மலரும் போதே
அதைக் கேட்கத்தானே ஆசை
எனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்
இணைய வேண்டும்
இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்
இருக்க வேண்டும்

ஆண்: யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை
என் வாழ்வு இருக்கும் போதே
எழுதி உயரத்தானே ஆசை


பாடல் : வசீகரன்
குரல் : உன்னிமேனன், ஐPவரேகா
இசை : வி.எஸ்.உதயா
எண் : 02
காதல் கடிதம்

No comments: