Monday, June 18, 2007
ஈழப் பெண்ணே
பல்லவி
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
சின்னக் கவிபாடடி
உன் கண்ணுக்குள்ளே ஏன் ஓவியத்தை
வரைந்தவர் யார் சொல்லடி
உன் நினைவுகள் என்னை உருக்கும்
பல பட்டாம் பூச்சிகள் பறக்கும்
ஆயிரம் வண்ணங்கள் சிரிக்கும்
என் வாசலில் வானவில் உதிக்கும்
தினம் தினம் மின்மினி
பறக்கின்றதே
சரணம் 1
நிலவின் மடியில் உலகம் மயங்கும்
அவசரமாய் காலை விடியும்
மஞ்சள் பூக்கள் ரோஐh கூட்டம்
அழகழகாய் நம்மை வாழ்த்தும்
மின்னல் மேகம் வந்து சால்வை போர்த்தும் போது
மழைத்துளி எட்டிப் பார்க்கும்
மஞ்சள் வெயில் வந்து மண்ணைப் போர்த்தும் போது
மனசெங்கும் பரவசமே...
கொள்ளை கொள்ளை இன்பம்
எல்லை இல்லா வானம்
விண்ணுக்கொரு பாலம் செய்வோம்
பூப்பறிப்போம்
சரணம் 2
மூன்றே மாதம் மூன்றே மாதம்
கோடைகாலம் பூத்து விரியும்
மஞ்சள் பூக்கள் மஞ்சள் பூக்கள்
இளம் கூந்தல் தேடித் திரியும்
பருவப் பூக்கள் சேலை கட்டும் போது
பனித்துளி எட்டிப் பார்க்கும்
ஆக்கப் பிறிக் கடற்க்கரையில்
அலைகள் மோதும் மோதும்
சிலைகள் கால் நனைக்கும்
சிறைகள் தாண்டிப் போவோம்
சிறகுகள் இரண்டு கேட்போம்
நீயும் நானும் காதல் செய்து
வேர்த்திருப்போம்.
பாடல் : வசீகரன்
குரல் : மதுபாலகிருஷ்ணன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 03
ஏட்டில் :
காதல் கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment