Monday, June 18, 2007

எழுது என் அன்பே



பல்லவி

எழுது எழுது என் அன்பே-ஒரு
கடிதம் எழுது என் அன்பே
உன்னை நான் நேசிக்கிறேன்
அதனால் தானே சுவாசிக்கிறேன்

சரணம் 1

பனியில் உறையும் உன் விழிகள்-ஒரு
நொடியில் உருகிடும் எனைப் பார்த்து
பாசம் நேசம் தருவேனே- உன்
பாதை எங்கும் வருவேனே

பார்த்த விழி பூத்திருப்பாய்-உன்
பார்வையாக வருவேனே
அலையாக நான் வந்து அணைப்பேனே-அந்தி
மழையாக உன்னை வந்து நனைப்பேனே

சரணம் 2

மனசில் பூக்கும் உன் பூக்கள்- என்
சேலை சேர்ந்துவிடும் வேளைவரும்
பூவின் வாசம் தருவவேனே - உன்
மேனி எங்கும் சிலிர்ப்பேனே - அங்கு

உனக்காக நான் வந்து கவிபாட- இங்கு
இருளோடு நீவந்து முகம்காட்டு-
உயிரோடும் உடலோடும் நான்தானே- என்
உறவாலே உனைவந்து தாலாட்டுவேன்

காதல் வாழ்க காதல் வாழ்க
பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை
காதல் வாழ்க காதல் வாழ்க

பாடல் : வசீகரன்
குரல் : அம்பிலி
இசை : வி.எஸ்.உதயா
எண் : 06
ஏட்டில் :
காதல் கடிதம்

No comments: