Monday, June 18, 2007

ஓரு நதியின் பெயரோடு



பல்லவி

ஓரு நதியின் பெயரோடு பிறந்தவளே
பெரு நதியாய் என்மேல் பாய்ந்தவளே
உன் உயிராலே என்னைத் திறந்தவளே
என் உயிரோடு வந்து கலந்தவளே.

என் விழியோரம் தினம்தினம் மிதக்கின்றாய்
ஏதேதோ புதுப்புது ரகசியம் கதைக்கின்றாய்
காதலா...காதலா... காதலா...
காதலா...காதலா...காதலா...

சரணம் - 1

கனவில் கிளித்தட்டு ஆடிடும் வேளை
புதுமெட்டு போடுகிறாய்
மழையெனும் இசைதனில் மூழ்கிடும் வேளை
தீயினை மூட்டுகிறாய்

தாலாட்டும் மடிமீது இடம் கேட்கிறேன்- நீ
பாராட்டும் மொழிமீது குளிர் காய்கிறேன்
தினம் தோறும் கவி பூக்கும்
இசைவந்து தேன் வார்க்கும்!
நீயின்றி என் வாழ்வு இல்லையே!

சரணம்- 2

தாமரைக் குளத்தில் சூரியக் கதிராய்
தினம் தினம் குதிக்கின்றாய்
ஆலமரத்தில் பேசிடும் கிளியாய்
செவிகளில் நிறைகின்றாய்

உன் பார்வை வரம் கேட்கும்
ஏழை யாசகன்
உன் பேரை தினம் பாடும்
நானோர் வாசகன்
நறுமுகையே குறுநிலவே
தரு நிழலே குளிர் மழையே
நீயின்றி என் வாழ்வு இல்லையே.

பாடல் : வசீகரன்
குரல் : விதுபிரதாபன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 07
ஏட்டில் : 07.11.2001
காதல் கடிதம்

No comments: