Monday, June 18, 2007
உயிருக்குள் ஊர்சுற்றும்
பல்லவி
உயிருக்குள் ஊர்சுற்றும்
உறவுப் பூமழையே- என்
உடலுக்குள் உயிர்ஊட்டும்
இன்பத் தேன்மழையே
மண்ணுக்குள் வீசும்
தென்றல்க் காற்றாய்- என்
மனசுக்குள் வந்தாய்
இசைமழையே
சரணம் 1
தூலிப்பான் பூவினிலே பூத்தவளா?
நீ யாரும் படிக்காத புத்தகமா?
மழைத்துளியாய் வந்து நீ வீழ்கையிலே
வெள்ளிக் கொலுசின் ஓசை கேட்குதடி
தேசம் விட்டு தேசம் வந்த நாயகியே
ஏனை தீண்டும் இன்பத் தேன்மொழியே
தினம் பாக்கள் சொல்லிப் பாடப்போகிறேன்
என் வாழ்க்கை உன்னை வாழப்போகிறேன்.
சரணம் 2
வானத்தில் வந்துதித்த தேவதையா?
நீருக்குள் மூழ்காத தாமரையா?
மழைவெப்பம் தந்து நீ போகையிலே
என் மனசுக்குள் வசந்தம் தோன்றுதடி
தேகம் மீது மோதும் தாவணியே
எனைத் தொட்டு எழுதும் மைத்துளியே
தினம் பாக்கள் சொல்லிப் பாடப்போகிறேன்
என் வாழ்க்கை உன்னை வாழப்போகிறேன்.
பாடல் : வசீகரன்
குரல் : உன்னிக்கிருஷ்ணன்
இசை : வி.எஸ்.உதயா
எண் : 04
ஏட்டில் :
காதல் கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment